பொருட்பால் · நட்பியல்

84. பேதைமை

குறள் 831840
  1. குறள் 831
    பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்.
  2. குறள் 832
    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்.
  3. குறள் 833
    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்.
  4. குறள் 834
    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையிற் பேதையார் இல்.
  5. குறள் 835
    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.
  6. குறள் 836
    பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.
  7. குறள் 837
    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.
  8. குறள் 838
    மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்கையொன் றுடைமை பெறின்.
  9. குறள் 839
    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.
  10. குறள் 840
    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.