பொருட்பால் · நட்பியல்

85. புல்லறிவாண்மை

குறள் 841850
  1. குறள் 841
    அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.
  2. குறள் 842
    அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.
  3. குறள் 843
    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.
  4. குறள் 844
    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னுஞ் செருக்கு.
  5. குறள் 845
    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.
  6. குறள் 846
    அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.
  7. குறள் 847
    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.
  8. குறள் 848
    ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.
  9. குறள் 849
    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு.
  10. குறள் 850
    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்.