பொருட்பால் · அமைச்சியல்

68. வினைசெயல்வகை

குறள் 671680
  1. குறள் 671
    சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.
  2. குறள் 672
    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.
  3. குறள் 673
    ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்.
  4. குறள் 674
    வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.
  5. குறள் 675
    பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.
  6. குறள் 676
    முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.
  7. குறள் 677
    செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்.
  8. குறள் 678
    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.
  9. குறள் 679
    நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.
  10. குறள் 680
    உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்கொள்வர் பெரியார்ப் பணிந்து.