பொருட்பால் · அமைச்சியல்
67. வினைத்திட்பம்
குறள் 661–670
- குறள் 661வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.
- குறள் 662ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
- குறள் 663கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.
- குறள் 664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.
- குறள் 665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.
- குறள் 666எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
- குறள் 667உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னார் உடைத்து.
- குறள் 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.
- குறள் 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.
- குறள் 670எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு.