குறள் 665 — வினைத்திட்பம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 135 · ஸ்கேன் 168 · மூலமும் சான்றும்