குறள் 675 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்