பொருட்பால் · அரசியல்
56. கொடுங்கோன்மை
குறள் 551–560
- குறள் 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து.
- குறள் 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.
- குறள் 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.
- குறள் 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.
- குறள் 555அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.
- குறள் 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.
- குறள் 557துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.
- குறள் 558இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.
- குறள் 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
- குறள் 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.