பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மை

குறள் 555கொடுங்கோன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 113 · ஸ்கேன் 146 · மூலமும் சான்றும்