பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மை

குறள் 552கொடுங்கோன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

மூலம் · அச்சுப் பக்கம் 113 · ஸ்கேன் 146 · மூலமும் சான்றும்