பொருட்பால் · அரசியல்

57. வெருவந்த செய்யாமை

குறள் 561570
  1. குறள் 561
    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து.
  2. குறள் 562
    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.
  3. குறள் 563
    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
  4. குறள் 564
    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்.
  5. குறள் 565
    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேய்கண் டன்ன துடைத்து.
  6. குறள் 566
    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.
  7. குறள் 567
    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.
  8. குறள் 568
    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு.
  9. குறள் 569
    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.
  10. குறள் 570
    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.