பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை

குறள் 561வெருவந்த செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 115 · ஸ்கேன் 148 · மூலமும் சான்றும்