பொருட்பால் · அரசியல்

55. செங்கோன்மை

குறள் 541550
  1. குறள் 541
    ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
  2. குறள் 542
    வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடி.
  3. குறள் 543
    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.
  4. குறள் 544
    குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.
  5. குறள் 545
    இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்கு.
  6. குறள் 546
    வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
  7. குறள் 547
    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.
  8. குறள் 548
    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.
  9. குறள் 549
    குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.
  10. குறள் 550
    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.