பொருட்பால் · அரசியல்

54. பொச்சாவாமை

குறள் 531540
  1. குறள் 531
    இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
  2. குறள் 532
    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
  3. குறள் 533
    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானு லோர்க்குந் துணிவு.
  4. குறள் 534
    அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.
  5. குறள் 535
    முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னு றிரங்கி விடும்.
  6. குறள் 536
    இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்.
  7. குறள் 537
    அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்.
  8. குறள் 538
    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
  9. குறள் 539
    இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
  10. குறள் 540
    உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்.