பொருட்பால் · அரசியல்
53. சுற்றந்தழால்
குறள் 521–530
- குறள் 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.
- குறள் 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்.
- குறள் 523அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.
- குறள் 524சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்.
- குறள் 525கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்.
- குறள் 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்.
- குறள் 527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.
- குறள் 528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்.
- குறள் 529தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரண மின்றி வரும்.
- குறள் 530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்.