பொருட்பால் · அரசியல்
52. தெரிந்து வினையாடல்
குறள் 511–520
- குறள் 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.
- குறள் 512வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினை.
- குறள் 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.
- குறள் 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
- குறள் 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்று.
- குறள் 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்.
- குறள் 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்.
- குறள் 518வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.
- குறள் 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திரு.
- குறள் 520நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.