பொருட்பால் · அரசியல்
51. தெரிந்து தெளிதல்
குறள் 501–510
- குறள் 501அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்.
- குறள் 502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவு.
- குறள் 503அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.
- குறள் 504குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.
- குறள் 505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்கருமமே கட்டளைக் கல்.
- குறள் 506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி.
- குறள் 507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்.
- குறள் 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.
- குறள் 509தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.
- குறள் 510தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.