பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்

குறள் 501தெரிந்து தெளிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 103 · ஸ்கேன் 136 · மூலமும் சான்றும்