பொருட்பால் · அரசியல்

50. இடனறிதல்

குறள் 491500
  1. குறள் 491
    தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது.
  2. குறள் 492
    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்.
  3. குறள் 493
    ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்.
  4. குறள் 494
    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்.
  5. குறள் 495
    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.
  6. குறள் 496
    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.
  7. குறள் 497
    அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்.
  8. குறள் 498
    சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.
  9. குறள் 499
    சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிது.
  10. குறள் 500
    காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.