பொருட்பால் · அரசியல்

49. காலமறிதல்

குறள் 481490
  1. குறள் 481
    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
  2. குறள் 482
    பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.
  3. குறள் 483
    அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்.
  4. குறள் 484
    ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.
  5. குறள் 485
    காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்.
  6. குறள் 486
    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.
  7. குறள் 487
    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
  8. குறள் 488
    செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலை.
  9. குறள் 489
    எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
  10. குறள் 490
    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.