பொருட்பால் · அரசியல்
48. வலியறிதல்
குறள் 471–480
- குறள் 471வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்.
- குறள் 472ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாத தில்.
- குறள் 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
- குறள் 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.
- குறள் 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.
- குறள் 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்.
- குறள் 477ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.
- குறள் 478ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடை.
- குறள் 479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்.
- குறள் 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.