பொருட்பால் · அரசியல்
47. தெரிந்து செயல்வகை
குறள் 461–470
- குறள் 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
- குறள் 462தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்.
- குறள் 463ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.
- குறள் 464தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.
- குறள் 465வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.
- குறள் 466செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.
- குறள் 467எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு.
- குறள் 468ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.
- குறள் 469நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.
- குறள் 470எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகு.