பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகை

குறள் 461தெரிந்து செயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 95 · ஸ்கேன் 128 · மூலமும் சான்றும்