பொருட்பால் · அரசியல்
46. சிற்றினஞ்சேராமை
குறள் 451–460
- குறள் 451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.
- குறள் 452நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு.
- குறள் 453மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்.
- குறள் 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவு.
- குறள் 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.
- குறள் 456மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை.
- குறள் 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்.
- குறள் 458மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து.
- குறள் 459மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து.
- குறள் 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.