பொருட்பால் · அரசியல்

45. பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441450
  1. குறள் 441
    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.
  2. குறள் 442
    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.
  3. குறள் 443
    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.
  4. குறள் 444
    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.
  5. குறள் 445
    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
  6. குறள் 446
    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.
  7. குறள் 447
    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.
  8. குறள் 448
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
  9. குறள் 449
    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.
  10. குறள் 450
    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.