பொருட்பால் · அரசியல்
44. குற்றங்கடிதல்
குறள் 431–440
- குறள் 431செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.
- குறள் 432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.
- குறள் 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.
- குறள் 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை.
- குறள் 435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.
- குறள் 436தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.
- குறள் 437செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.
- குறள் 438பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.
- குறள் 439வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.
- குறள் 440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.