குறள் 433 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 89 · ஸ்கேன் 122 · மூலமும் சான்றும்