பொருட்பால் · அரசியல் · சுற்றந்தழால்

குறள் 527சுற்றந்தழால்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

மூலம் · அச்சுப் பக்கம் 108 · ஸ்கேன் 141 · மூலமும் சான்றும்