குறள் 535 — பொச்சாவாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னு றிரங்கி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 109 · ஸ்கேன் 142 · மூலமும் சான்றும்