அறத்துப்பால் · துறவறவியல்

31. வெகுளாமை

குறள் 301310
  1. குறள் 301
    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.
  2. குறள் 302
    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.
  3. குறள் 303
    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்.
  4. குறள் 304
    நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற.
  5. குறள் 305
    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
  6. குறள் 306
    சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.
  7. குறள் 307
    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
  8. குறள் 308
    இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
  9. குறள் 309
    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்.
  10. குறள் 310
    இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.