அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமை

குறள் 305வெகுளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்