அறத்துப்பால் · துறவறவியல்
30. வாய்மை
குறள் 291–300
- குறள் 291வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்தீமை யிலாத சொலல்.
- குறள் 292பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.
- குறள் 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
- குறள் 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.
- குறள் 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.
- குறள் 296பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.
- குறள் 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.
- குறள் 298புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.
- குறள் 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.
- குறள் 300யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.