அறத்துப்பால் · துறவறவியல்

29. கள்ளாமை

குறள் 281290
  1. குறள் 281
    எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
  2. குறள் 282
    உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்.
  3. குறள் 283
    களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்.
  4. குறள் 284
    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்.
  5. குறள் 285
    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.
  6. குறள் 286
    அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.
  7. குறள் 287
    களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்.
  8. குறள் 288
    அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு.
  9. குறள் 289
    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.
  10. குறள் 290
    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு.