அறத்துப்பால் · துறவறவியல்

28. கூடா ஒழுக்கம்

குறள் 271280
  1. குறள் 271
    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.
  2. குறள் 272
    வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்தானறி குற்றப் படின்.
  3. குறள் 273
    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
  4. குறள் 274
    தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
  5. குறள் 275
    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்.
  6. குறள் 276
    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்.
  7. குறள் 277
    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து.
  8. குறள் 278
    மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.
  9. குறள் 279
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னவினைபடு பாலாற் கொளல்.
  10. குறள் 280
    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்.