அறத்துப்பால் · துறவறவியல்
27. தவம்
குறள் 261–270
- குறள் 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.
- குறள் 262தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.
- குறள் 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்.
- குறள் 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்.
- குறள் 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.
- குறள் 266தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
- குறள் 267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
- குறள் 268தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
- குறள் 269கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
- குறள் 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.