அறத்துப்பால் · துறவறவியல்

26. புலால் மறுத்தல்

குறள் 251260
  1. குறள் 251
    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.
  2. குறள் 252
    பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
  3. குறள் 253
    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்.
  4. குறள் 254
    அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.
  5. குறள் 255
    உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு.
  6. குறள் 256
    தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
  7. குறள் 257
    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்.
  8. குறள் 258
    செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
  9. குறள் 259
    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.
  10. குறள் 260
    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.