அறத்துப்பால் · துறவறவியல் · புலால் மறுத்தல்

குறள் 253புலால் மறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.

மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்