அறத்துப்பால் · துறவறவியல்
25. அருளுடைமை
குறள் 241–250
- குறள் 241அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முள.
- குறள் 242நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.
- குறள் 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.
- குறள் 244மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினை.
- குறள் 245அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி.
- குறள் 246பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.
- குறள் 247அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- குறள் 248பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.
- குறள் 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
- குறள் 250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து.