அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை

குறள் 249அருளுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அதுபோலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்