அறத்துப்பால் · இல்லறவியல்

24. புகழ்

குறள் 231240
  1. குறள் 231
    ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு.
  2. குறள் 232
    உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்.
  3. குறள் 233
    ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்.
  4. குறள் 234
    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு.
  5. குறள் 235
    நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
  6. குறள் 236
    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
  7. குறள் 237
    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்.
  8. குறள் 238
    வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
  9. குறள் 239
    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
  10. குறள் 240
    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.