அறத்துப்பால் · இல்லறவியல்
23. ஈகை
குறள் 221–230
- குறள் 221வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து.
- குறள் 222நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.
- குறள் 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.
- குறள் 224இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.
- குறள் 225ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்.
- குறள் 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
- குறள் 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது.
- குறள் 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.
- குறள் 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.
- குறள் 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடை.