குறள் 222 — ஈகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல. சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 45 · ஸ்கேன் 78 · மூலமும் சான்றும்