குறள் 228 — ஈகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
மூலம் · அச்சுப் பக்கம் 46 · ஸ்கேன் 79 · மூலமும் சான்றும்