அறத்துப்பால் · இல்லறவியல்

22. ஒப்புரவறிதல்

குறள் 211220
  1. குறள் 211
    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு.
  2. குறள் 212
    தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
  3. குறள் 213
    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.
  4. குறள் 214
    ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.
  5. குறள் 215
    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.
  6. குறள் 216
    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
  7. குறள் 217
    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.
  8. குறள் 218
    இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.
  9. குறள் 219
    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்செய்யா தமைகலா வாறு.
  10. குறள் 220
    ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.