அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்

குறள் 217ஒப்புரவறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 44 · ஸ்கேன் 77 · மூலமும் சான்றும்