அறத்துப்பால் · இல்லறவியல்

21. தீவினையச்சம்

குறள் 201210
  1. குறள் 201
    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செருக்கு.
  2. குறள் 202
    தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
  3. குறள் 203
    அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்.
  4. குறள் 204
    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
  5. குறள் 205
    இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து.
  6. குறள் 206
    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
  7. குறள் 207
    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்.
  8. குறள் 208
    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.
  9. குறள் 209
    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.
  10. குறள் 210
    அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.