அறத்துப்பால் · இல்லறவியல்
20. பயனில சொல்லாமை
குறள் 191–200
- குறள் 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
- குறள் 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.
- குறள் 193நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.
- குறள் 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
- குறள் 195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.
- குறள் 196பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.
- குறள் 197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.
- குறள் 198அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.
- குறள் 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.
- குறள் 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.