அறத்துப்பால் · இல்லறவியல்

19. புறங்கூறாமை

குறள் 181190
  1. குறள் 181
    அறங்கூறா நல்ல செயினும் ஒருவன்புறங்கூறா என்றல் இனிது.
  2. குறள் 182
    அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.
  3. குறள் 183
    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்.
  4. குறள் 184
    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.
  5. குறள் 185
    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
  6. குறள் 186
    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்.
  7. குறள் 187
    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
  8. குறள் 188
    துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
  9. குறள் 189
    அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை.
  10. குறள் 190
    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு.