குறள் 263 — தவம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்துவிடக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 53 · ஸ்கேன் 86 · மூலமும் சான்றும்