குறள் 264 — தவம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 53 · ஸ்கேன் 86 · மூலமும் சான்றும்