அறத்துப்பால் · துறவறவியல் · தவம்

குறள் 267தவம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 54 · ஸ்கேன் 87 · மூலமும் சான்றும்